News April 26, 2025
விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

“தென்னை மற்றும் பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட வேளாண்மைத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோடைகாலம் என்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெறுவதற்கு சொட்டுநீர் பாசனம் திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
Similar News
News April 26, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (26.04.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News April 26, 2025
சேலத்தில் இன்று 102.4 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதமடித்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயிலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தர்பூசணி, நீர்மோர், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.26) 102.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
News April 26, 2025
கோவில் வெடி விபத்து – இபிஸ் கண்டனம்!

கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் கோயில் விழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலேயே இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு எனது கண்டனங்கள் என அவர் தெரிவித்துள்ளார்