News May 16, 2024
விவசாயிகளுக்கு கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
கோவையில் நிலத்தின் மதிப்பு கிடு கிடு உயர்வு

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரமாக கோவை உள்ளது. இங்கு ஐ.டி. தொழில் மையங்கள், மோட்டார் பம்பு தொழிற்சாலைகள், பவுண்டரிகள், மின்னணு வாகன தொழிற்சாலைகள் அதிக அளவில் கொட்டி கிடக்கின்றன. மேலும், தொழிற்சாலைகள் தேவை அதிகரிப்பால் கட்டிடங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கோவையில் ரேஸ்கோர்ஸ், சூலூர், பீளமேடு, அவினாசி ரோடு பகுதியில் நில மதிப்பு உயர்ந்து வருகிறது.
News December 4, 2025
BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாநகரின் மையத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இதன் அருகிலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பிரதான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு 11-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலமாக வந்துள்ளது. இதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன், போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 4, 2025
கோவை: ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவிய பிரியா(25). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிய பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் காதலித்த இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


