News October 23, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

பெரம்பலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in என்ற இணையதளத்தில்<<>> பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட திமுக சார்பாக அரியலூரில் புதிய கலைஞர் அறிவாலயம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (05-12-2025) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை நேற்று பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் அமைச்சர் சிவசங்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.

News December 5, 2025

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் 09.12.2025 முதல் 12.12.2025 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!