News October 23, 2024
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<
News November 25, 2025
பெரம்பலூரில் போஸ்டரால் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தில் உள்ள விருதாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இடத்தை காலி செய்து கொடு உடனடியாக கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்து என கிராம மக்கள் சார்பில் பெரம்பலூர் நகரப் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் துறைமங்கலம் ரோடு, ராஜா திரையரங்கம் அருகில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு, இந்து அறநிலைத்துறையே என்று போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.


