News October 23, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

பெரம்பலூர்: மக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு – ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏறக்குறைய 378 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News December 30, 2025

பெரம்பலூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

பெரம்பலூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

News December 30, 2025

சொர்க்க வாசல் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மரகத வள்ளி தாயார் சமேத மதனகோபால் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் உடன் இருந்தார்.

error: Content is protected !!