News October 23, 2024
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) அதிக மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 7, 2026
பெரம்பலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

பெரம்பலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 7, 2026
பெரம்பலூர்: காதல் தோல்வியால் தற்கொலையா?

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20). இவர் வெளிநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். மேலும் காதல் தோல்வியா என்ற கோணத்தில் பாடாலூர் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


