News October 23, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 5, 2026

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.

News January 5, 2026

பெரம்பலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 5, 2026

பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

image

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க இங்குள்ள பழமையான இடங்களை நாம் காண்போம்
1. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2. இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3. கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4. பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!