News April 2, 2025

விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்காசி மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லினை அரசு நிர்ணயித்த விலையில் இடைத்தரகர்கள் இன்றி அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளார். அதற்குரிய தொகையினை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவ.30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு இன்று டிச.1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்படி வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

image

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும்,  10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

error: Content is protected !!