News March 18, 2025
விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 2025 மாதத்திற்கான, விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News March 19, 2025
இளைஞர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம், முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வங்கி, நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு 12 மாத கட்டணமில்லா பயிற்சி வழங்குகிறது. படித்த 21 – 24 வயது வரை உள்ள மாணவ-மாணவியர் https://pminternship.mca.gov என்ற இணையதள முகவரி வாயிலாக வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News March 18, 2025
காஞ்சிபுரத்தில் சிறந்த ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம்

காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(மார்.17) நடைபெற்றது. அப்போது நல்லிணக்கத்துடன் சாதி வேறுபாடின்றி மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
News March 18, 2025
காஞ்சிபுரம் கண்காணிப்புக் குழு பதவிகளுக்கான விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாவட்டம், இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில் புதிய உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 28க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.