News April 15, 2024
விவசாயம் செழிக்க வழிபாடு

சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
Similar News
News December 6, 2025
தஞ்சை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
News December 6, 2025
தஞ்சை: தீக்கிரையான 4 கடைகள்

அம்மாபேட்டை அருகே பூண்டி மெயின் ரோடு, கடைவீதியில் முகம்மது இஸ்மாயில் என்பவர் நடத்திவரும் பேன்ஸி ஸ்டோர் கடையில் இரவு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகிலிருந்த விஜயகுமாரின் பஞ்சர் கடை, ரவியின் ஏஜென்சி மற்றும் சக்திவேலின் எர்த் மூவர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


