News September 28, 2024
விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் சிறப்பு ரயில்

தாம்பரத்திலிருந்து, விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில், வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. திங்கள், வியாழன், மற்றும் சனி ஆகிய நாட்களில் தாம்பரம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் இரவு 7 மணிக்கு வருகிறது. மறுநாள் காலை 5.55க்கு ராமநாதபுரம் சென்று அடையும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
Similar News
News September 14, 2025
விழுப்புரம் மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

விழுப்புரம் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News September 14, 2025
விழுப்புரம்: ராமதாஸ், அன்புமணிக்கு தடை?

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் 8 மாதங்களாக நீடித்தது. இதையடுத்து, செப்.11ம் தேதி அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். வரும் செப்.17ம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் தியாகிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், நிகழ்ச்சிக்கு இருவருக்கும் தடைவிதிக்க திண்டிவனம் சார் ஆட்சியருக்கு டிஎஸ்பி பரிந்துரைத்துள்ளார்
News September 14, 2025
விழுப்புரம்: மண்ணெண்ணை குடித்த முதியவர் பலி

விழுப்புரம் வட்டம் தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி(85). இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.13) காலை உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.