News September 15, 2024
விழுப்புரம்: ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தீர்வு

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசுகையில், “நான் முதன்மை மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற 2021 நவம்பா் முதல் 2024, ஜூன் மாதம் சுமாா் 31 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது என கூறினார்.
Similar News
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.
News December 3, 2025
விழுப்புரம்: மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி

டி.புதுப்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி தங்கமணி. இவருக்கு மனைவி மற்றும் 5 மாத பெண் குழந்தை உள்ளனர். இவர், நேற்று காலையில் குளித்து முடித்து, கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தனது உடையை எடுத்துள்ளார். அப்போது, மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, இரும்புக் கம்பியில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
விழுப்புரம்: மின் ஊழியர் வாகனம் மோதி பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த எறும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(50). இவர் சத்தியமங்கலம் மின்சார அலுவலகத்தில் மின்சார பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பணிக்காக புதுச்சேரி திருவண்ணாமலை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். நல்லான் பிள்ளை பெற்றால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


