News October 25, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் Speed Breaker தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
Similar News
News October 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
கார் மோதி விபத்து – ஒருவர் பலி; இருவர் படுகாயம்

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அக்.25 மாலை கார் மோதிய விபத்தில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை கழகச் செயலாளர் ராமதாஸ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலூகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 25, 2025
தீபாவளி சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீபாவளி சீட்டு பிடித்து ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். மேலும், தலைமறைவாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தங்கள் பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அக்.25 புகார் மனு அளித்தனர்.


