News October 25, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் Speed Breaker தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
Similar News
News September 18, 2025
விழுப்புரம்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் மரக்காணம்- திண்டிவனம் சாலையோரம் மின்மாற்றியில் நேற்று பழுது ஏற்பட்டிருந்தது. இதனை சரி செய்ய முருக்கேரி துணைமின் நிலைய மின் ஊழியர்கள் 10 பேர் சென்றிருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியரான ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
விழுப்புரம்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

விழுப்புரம் மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
விழுப்புரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

விழுப்புரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <