News September 14, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
BREAKING: விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (டிச.3) விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!
News December 2, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
விழுப்புரம்: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு!

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.


