News September 14, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
விழுப்புரம்: தினமும் கையெழுத்து.. கார் ஓட்டுநர் தற்கொலை!

விழுப்புரம்: சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர், சரவணன் 6 மாதங்களுக்கு முன்பு காரில் திருவண்ணாமலைக்கு சவாரி வந்துள்ளார். அப்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்தார். ஆனால் தினமும் செஞ்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் நேற்று முன்தினம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
News December 7, 2025
விழுப்புரம்: தினமும் கையெழுத்து.. கார் ஓட்டுநர் தற்கொலை!

விழுப்புரம்: சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர், சரவணன் 6 மாதங்களுக்கு முன்பு காரில் திருவண்ணாமலைக்கு சவாரி வந்துள்ளார். அப்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்தார். ஆனால் தினமும் செஞ்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் நேற்று முன்தினம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
News December 7, 2025
விழுப்புரம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

விக்கிரவாண்டி அடுத்த எம். குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி மனைவி சித்ரா (54) கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், 5ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.


