News September 28, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.

Similar News

News November 16, 2025

விழுப்புரம்: பைக், ஸ்கூட்டர் மோதல் – 2 பேர் பலி!

image

விழுப்புரம், மரக்காணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அரவிந்த் நேற்று அதே பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்கூட்டரை திடீரென திருப்பிய நிலையில், பின்னால் வந்த சென்னையை சேர்ந்த சூர்யன் பலமாக மோதினார். இந்த விபத்தில் சூர்யன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், கிருஷ்ணனும் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

விழுப்புரத்தில் 453 பேர் ஆப்சென்ட்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 16 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 4,001 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 3,548 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 453 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

விழுப்புரத்தில் கனமழை வெளுக்கும்!

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.

error: Content is protected !!