News September 28, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.
Similar News
News December 19, 2025
விழுப்புரம்: கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி!

விழுப்புரம்: பரனூர் கிராமத்தை சேர்ந்த மாசி (53) என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் வெளியே சென்ற மாசி, நேற்று காகாகுப்பம் பகுதியில் உள்ள பொது கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்நிலையில், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பாரதிராஜா, அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
விழுப்புரம்: மகளென்றும் பாராமல் கொல்ல முயன்ற தந்தை!

விழுப்புரம்: கண்டமானடியைச் சேர்ந்த பாபு (46) குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் வைஷ்ணவியிடம் (16) சாப்பாடு செய்யவில்லையா? எனக் கேட்டு திட்டியுள்ளார். தனது மகளென்றும் பாராமல், சுவரில் முட்டி கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நேற்று பாபுவை போலீசார் கைது செய்தனர்.
News December 19, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


