News September 28, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.

Similar News

News December 5, 2025

விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

image

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.

News December 5, 2025

விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

image

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.

News December 5, 2025

விழுப்புரத்தில் 2,851 பேருக்கு HIV சிகிச்சை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,851 பேர் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், சுகவாழ்வு மையங்கள் மூலமாக 32,394 பேருக்கு பால்வினை பரிசோதனை செய்யப்பட்டு அதில் 1,394 பேருக்கு பால்வினை நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!