News September 28, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.
Similar News
News December 1, 2025
விழுப்புரம்: தட்டிக்கேட்ட முதியவருக்கு கத்திக்குத்து!

விழுப்புரம்: எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (68). நேற்று முன்தினம், இரவு 11 மணிக்கு அவரது வீட்டின் அருகே 2 பேர் மதுபோதையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட தேவராஜை, ஆத்திரத்தில் அந்த 2 பேரும் கத்தியால் குத்தியுள்ளனர். தொடர்ந்து, முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முருகன், (25), ராம்குமார் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 1, 2025
விழுப்புரம்: மனைவி பிரிந்ததால் கணவன் விபரீத முடிவு!

மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ், அவரது மனைவி ரேகா. இவர்களிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


