News April 29, 2025
விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 3, 2025
தளவானூர் அணைகட்டில் ஆட்சியர் ஆய்வு

கோலியனூர் ஒன்றியம் தளவானூர் அணைகட்டில் நீர்வளத்துறை சார்பில் மாநில நிதி திட்டத்தின் கீழ் அணைகட்டு புணரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை ஆட்சியார் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி. உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கபிலன் கலந்துகொணடனர்.
News December 3, 2025
விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.


