News August 26, 2024
விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மேம்பாலம் மூடல்

விழுப்புரம் – புதுச்சேரி சாலை ரயில்வே மேம்பாலம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது. அதாவது ஆக.31 மற்றும் செப்.2 ஆகிய தேதிகளில் மூடப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம் மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே வழக்கமாக மேம்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் குறிப்பிட்ட தேதிகளில் மாற்று பாதைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News December 25, 2025
விழுப்புரம்: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

விழுப்புரம் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
விழுப்புரத்தில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச. 26) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News December 25, 2025
விழுப்புரம்: சாப்பாடு பரிமாறிய நபருக்கு அடி உதை!

விழுப்புரம்: அய்யனம்பாளையத்தைச் சேர்ந்த அருள்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி விழாவில் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்குமார் போலீசார் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.


