News April 24, 2025
விழுப்புரம்: தலையெழுத்து மாற வேண்டுமா …? இங்கு போங்க

விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் வரலாறு. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது, தோஷம் நீங்க இத்தலத்துள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை.மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 26, 2025
விழுப்புரத்தில் கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

விழுப்புரம் கே கே சாலை மருதமலை முருகன் நகர் பகுதியில் ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுரேஷ் உள்ளார். அவர் நேற்று (நவ.26) பூஜை முடித்து சென்று விட்டார். காலையில் வந்து பார்க்கும்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைத்திருந்த உண்டியலும் உடைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

கொடுக்கன்குப்பத்தில் மேல்மலையனூர் எஸ்.ஐ வினதா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஆலமரத்தடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாரதியார்,ஸ்ரீதர்,சுரேஷ் பார்த்திபன்,லோகநாதன் ஆகியோர் கஞ்சா,போதை மாத்திரைகள் விற்பவர்கள் என தெரியவந்த நிலையில் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 கிராம்,கஞ்சா 7 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


