News March 20, 2025

விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலத்தால் பரபரப்பு

image

திண்டிவனம் அய்யந்தோப்பு கல்லூரி செல்லும் சாலையோரம் தனியார் ரைஸ்மில் அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ரோசணை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 28, 2025

படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலி

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பத்தைச் சோ்ந்தவர் மீனவா் மணிவண்ணன்(36). இவா் கடந்த 18ம் தேதி ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கரைப் பகுதியிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் சென்றபோது கடல் அலையின் சீற்றத்தில் படகு சிக்கி கவிழ்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்தாா். புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 27, 2025

ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE,B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 27, 2025

கோர விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து இளம்பெண் பலி

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் மூங்கிலான், 30 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரேவதி, 27; இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. இவர்கள் மூவரும் கடந்த 24ஆம் தேதிஆட்டோவில் சென்றபோது, சாரம் அருகே கார் மோதி ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரேவதி நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!