News March 21, 2024
விழுப்புரம்: ஒரு அரசியல்வாதிகூட எட்டிப் பார்க்கவில்லை

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) துவங்கியது. மக்களவை தனித் தொகுதியான விழுப்புரத்தில் நேற்று தேர்தல் அலுவலர் காலை 11 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தார். ஆனால் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மனு தாக்கல் நேற்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 30ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
விழுப்புரம்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

விழுப்புரம், மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 18, 2025
விழுப்புரம்:கம்பன் நகர் பகுதியில் நெடுஞ்சாலை கட்டுமானம் பராமரிப்பு

விழுப்புரம் நகராட்சி கம்பன் நகர் பகுதியில் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் மூலம் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையின் தரம் மற்றும் அளவு குறித்து ஆட்சியர் ஷே ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.18) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் கோட்டப்பொறியாளர் இந்த ஆய்வில் உடன் இருந்தார்.
News December 18, 2025
செஞ்சியில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய காரால் பரபரப்பு!

செஞ்சி சிங்கவரம் சாலையில் இன்று (டிச.18) மேல்மலையனூர் நோக்கிச் சென்ற சொகுசு கார் சாலையோர கால்வாயில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்காததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


