News March 26, 2025

விழுப்புரம் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவிட்டார்.

Similar News

News November 23, 2025

விழுப்புரம்: தனிக்குடித்தனம் சென்ற மகன்- தாய் தற்கொலை!

image

விழுப்புரம்: துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி தனலட்சுமி (55). இவர்களது மகன் சரவணன் தனிக்குடித்தனம் போகிறேன் எனக்கூறியதால் தனலட்சுமி மனமுடைந்து பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

News November 23, 2025

விழுப்புரம்: சப்பாத்தி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

image

விழுப்புரம்: கரடிக்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி மகள் பூவரசி (14). நேற்று முன்தினம் இரவு பூவரசி சப்பாத்தி, குருமா சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பூவரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர் சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே பூவரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 23, 2025

விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

image

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!