News October 23, 2024
விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
விழுப்புரம்: சமத்துவ பொங்கல் – ஆட்சியர் ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொங்கல் திருவிழா 2026 முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (8.01.2026) நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பெரும்பான்மையாக பங்கேற்றனர்.
News January 9, 2026
விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.9) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய், பிராய்லர் கோழி 190 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ 760 ரூபாய் என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய், வவால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.


