News October 23, 2024
விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
விழுப்புரம் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரவீன் குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார், பிரவீன் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
News September 15, 2025
அன்பு கரங்கள் திட்டம்: ஆட்சியர் பெருமிதம்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பெற்றோர் இருந்தால் என்ன கிடைக்குமோ அதை அந்தக் குழந்தைகளுக்கு “அன்புக்கரங்கள் திட்டம் ” மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகின்றார். இத்திட்டம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
விழுப்புரம்: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப்.15) டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதில், ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.