News October 23, 2024

விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 18, 2025

விழுப்புரம்:மருத்துவக் கல்வி இயுக்குனரகம் 75வது வைரவிழா!

image

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் 75வது வைரவிழா கொண்டாட்டம் நடந்தது. முண்டியம்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்லுாரி கலை அரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். மருத்துவ கல்வி இயக்குனரகம் துவங்கி 75 ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு பிரயாக் –25 என்ற கலாச்சார திருவிழா நடைபெற்றது.

News December 18, 2025

விழுப்புரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

விழுப்புரம்: பால் பண்ணை அமைக்க ரூ.1.67 லட்சம்!

image

1) விழுப்புரம் மக்களே., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் ரூ.1.67 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 2) பால் பண்ணை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும். 3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு. 4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

error: Content is protected !!