News March 24, 2025
விழுப்புரம் அருகே மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Similar News
News November 28, 2025
விழுப்புரத்தில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார், திருப்பாச்சனுார் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.29) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அதனால், பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், சேத்துார், அமாவாசைபாளையம், தி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லுார், கொண்டசமுத்திரம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு சுற்று பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
News November 28, 2025
விழுப்புரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் தற்கொலை!

விழுப்புரம்: வீரசோழபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகள் சரண்யா (வயது 22). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி இறந்தார். சரண்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


