News April 22, 2025
விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விழுப்புரம் தாலுகா போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

விழுப்புரம் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
விழுப்புரம்: ஆட்டோ கவிழ்ந்து வியாபாரி உயிரிழப்பு!

விழுப்புரம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் லூர்து பிரபாகர்(55). இவர், ஆட்டோ மூலம் வளையல் வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் லூர்து பிரபாகர் நேற்று முன்தினம் இரவு, ராவணாபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி, ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லூர்து பிரபாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி விவரம்!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


