News April 22, 2025

விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

image

மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விழுப்புரம் தாலுகா போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் அக்டோபர் மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் அக்.31 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாய சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 30, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இன்று அக்.30 விழுப்புரம் மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 27 நபர்கள் கலந்து கொண்டு ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனம் என மொத்த நான்கு வானங்கள் ரூ. 68,700 தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகை முழுவதும் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

error: Content is protected !!