News August 24, 2024

விழுப்புரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது 

image

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சாதி மதம் கடந்து சமத்துவத்தை போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதுக்கு இந்தாண்டு விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் விழாவில் முன்னாள் நீதிபதி சந்துரு கையால் விருதினைப் பெற உள்ளார்.

Similar News

News November 27, 2025

விழுப்புரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் விதைகளுக்கு தடை

image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், வீரபாண்டி பகுதிகளில் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி நடராஜன்ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் முறையான அரசு பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவுகள், கொள்முதல் பட்டியல் இல்லாத 18 விதை குவியல்களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

News November 27, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

error: Content is protected !!