News May 17, 2024

விழுப்புரம்: அம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ அருங்குணம் கிராமத்தில் நேற்று (மே 16) அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தயாளன் தென்களவாய் பழனி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Similar News

News September 14, 2025

விழுப்புரம்: மண்ணெண்ணை குடித்த முதியவர் பலி

image

விழுப்புரம் வட்டம் தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி(85). இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.13) காலை உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

விழுப்புரம்: 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு தீர்வு

image

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (செப்.13) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு, தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தனர். இதில் நீதிபதி மணிமொழி, சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

News September 14, 2025

செஞ்சியில் ரூ.6.8 கோடி நஷ்ட ஈடு

image

செஞ்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் சட்டப்பணிகள் குழு தலைவர், நீதிபதி கதிரவன் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திவ்யா ஆகியோர் வழக்குகளை நேற்று(செப்.13) விசாரித்தனர். இதில் 114 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6.8 கோடி நஷ்ட ஈடு வழங்கபட்டது. ரூ.22 லட்சம் மதிப்பில் 34 வங்கி வழக்குகள் என மொத்தம், 149 வழக்குகள் ரூ.7.2 கோடி மதிப்பில் சமரச முறையில் முடித்து வைத்தனர்.

error: Content is protected !!