News May 17, 2024

விழுப்புரம்: அம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ அருங்குணம் கிராமத்தில் நேற்று (மே 16) அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தயாளன் தென்களவாய் பழனி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Similar News

News October 13, 2025

விழுப்புரம்: பெற்றத் தந்தைக்கு எமனாகிய மகன்

image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ஒடுவன்குப்பம் கிராமத்தில் இன்று அதிகாலையில் வயதான முதியவர் தனது மகனால் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போது இருவருக்கும் சொத்து தகராறு இருந்து உள்ளது. பின்னர் டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இது குறித்து போலிஸ்சார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்த நபரை விரைவில் கைது செய்யப்படுவார்.

News October 13, 2025

விழுப்புரம்: தங்க நகை திருட்டு: இளைஞர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவர் வீட்டில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 1/2 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.

News October 12, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!