News May 17, 2024
விழுப்புரம்: அம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ அருங்குணம் கிராமத்தில் நேற்று (மே 16) அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தயாளன் தென்களவாய் பழனி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Similar News
News January 1, 2026
விழுப்புரத்தில் 339 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் 489 கொள்ளை, 21 வழிப்பறி, 468 திருட்டு என மொத்தம் 978 குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 20 ஆயிரத்து 545 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர 32 கொலை வழக்குகளில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News January 1, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.31) இரவு முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.31) இரவு முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


