News November 23, 2024
விழுப்புரத்தில் 56,871 மாணாக்கர்கள் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1,206 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 56,871 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார். 1- 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
Similar News
News November 8, 2025
விழுப்புரம்: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

விழுப்புரம் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
விழுப்புரம்: தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ம.ஜெயச்சந்திரன். சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். வங்கி அலுவலர்கள் அடுத்த வாரம் வருமாறு கூறியதால் வீடு திரும்பிய அவர், வாகனத்தில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
News November 8, 2025
விழுப்புரம்: காவலர் பணி தேர்வர்கள் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை(நவ.09) நடைபெற உள்ள தேர்வில் 10,859 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட எஸ்.பி சரவணன், ‘தேர்வாளர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 9:30 மணிக்குமேல் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை. எலக்ட்ரானிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.


