News September 15, 2024

விழுப்புரத்தில் 5372 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வட்டப் பகுதிகளில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 14,920 பேரில் 11,181 போ் மட்டுமே எழுதினா். திண்டிவனம் வட்டப் பகுதிகளில் 6,160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,527 போ் மட்டுமே எழுதினா். மொத்தம் 21,080 பேரில் 15,708 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்ற நிலையில், 5,372 போ் தோ்வெழுத வரவில்லை.

Similar News

News August 13, 2025

விழுப்புரத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று (ஆக.13) நடைபெறுகிறது. இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். மகளிர் உரிமை தொகை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று(ஆக.13) இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

துப்பாக்கியால் சுட்ட வழக்கு – குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் ஜூலை 12-ம் தேதி குடும்ப தகராறில் தனது மனைவி லாவண்யா, தாய் பச்சையம்மாள், மற்றும் சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டதில் தம்பி கார்த்திக், மனைவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில் தென்னரசு என்பவர் கைது செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று(ஆக.12) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்

error: Content is protected !!