News September 15, 2024
விழுப்புரத்தில் 5372 பேர் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வட்டப் பகுதிகளில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 14,920 பேரில் 11,181 போ் மட்டுமே எழுதினா். திண்டிவனம் வட்டப் பகுதிகளில் 6,160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,527 போ் மட்டுமே எழுதினா். மொத்தம் 21,080 பேரில் 15,708 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்ற நிலையில், 5,372 போ் தோ்வெழுத வரவில்லை.
Similar News
News January 2, 2026
விழுப்புரம்: சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 2, 2026
விழுப்புரம்: சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 2, 2026
விழுப்புரம்: தந்தை கண்முன்னே மகன் பரிதாப பலி!

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த துளசிங்கம், நேற்று தனது மகன் நவீன்ஸ்ரீ-யை (11) மொபெட்டில் அமர வைத்துக் கொண்டு, நடுவனந்தலில் இருந்து – ஆகூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் வந்த லாரி வழிவிடுவதற்காக துளசிங்கம் மொபெட் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


