News October 25, 2024
விழுப்புரத்தில் 3 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.25) காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரத்தில் 3 மில்லி மீட்டர் மழையும், மரக்காணத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், மீண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 18, 2025
மலை குன்றில் சாராயம் காய்சியவர் கைது

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
News September 18, 2025
மின்மாற்றியை இடம் மாற்றிய போலீசார்: பாராட்டிய எஸ்.பி

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
News September 18, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.