News October 25, 2024
விழுப்புரத்தில் 3 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.25) காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரத்தில் 3 மில்லி மீட்டர் மழையும், மரக்காணத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், மீண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 13, 2025
விழுப்புரத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று (ஆக.13) நடைபெறுகிறது. இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். மகளிர் உரிமை தொகை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” விழுப்புரம் நகராட்சி, மேல்மலையனூர் ஒன்றியம், காணை ஒன்றியம், வானூர் ஒன்றியம், முகையூர் ஒன்றியம் மற்றும் மரக்காணம் பேரூராட்சியில் இன்று(ஆக.13) இம்முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
துப்பாக்கியால் சுட்ட வழக்கு – குண்டர் சட்டத்தில் அடைப்பு

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் ஜூலை 12-ம் தேதி குடும்ப தகராறில் தனது மனைவி லாவண்யா, தாய் பச்சையம்மாள், மற்றும் சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டதில் தம்பி கார்த்திக், மனைவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில் தென்னரசு என்பவர் கைது செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று(ஆக.12) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்