News August 7, 2024

விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், கொட்டியாம்பூண்டி, சித்தனி, பேரணி, ஆவுடையார்பட்டு, பாப்பனபட்டு, முண்டியம்பாக்கம், சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்ததா?

Similar News

News December 3, 2025

விழுப்புரம்: வளர்ப்பு நாயால் முதியவருக்கு கொலை மிரட்டல்!

image

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா தேவநாதன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் பற்குணன், கிருஷ்ண தேவநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 3, 2025

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

image

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

News December 3, 2025

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

image

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!