News August 7, 2024
விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், கொட்டியாம்பூண்டி, சித்தனி, பேரணி, ஆவுடையார்பட்டு, பாப்பனபட்டு, முண்டியம்பாக்கம், சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்ததா?
Similar News
News October 21, 2025
விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சிக்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
விழுப்புரம்: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து அதிரடி வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த மீனா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து 300 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 21, 2025
காரில் மதுபாட்டில் கடத்திய நபர் கைது

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் போலீசார் இன்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 233 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.