News March 18, 2025

விழுப்புரத்தில் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

image

விழுப்புரத்தை சேர்ந்த காத்தமுத்து தனது தந்தை இறப்புச் சான்று பெறுவது தொடர்பாக மனு அளித்துள்ளார். இதற்காக நகராட்சி ஊழியர் மதன் பத்தாயிரம் லஞ்சம் கேட்ட போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்களின் அறிவுரைப்படி இன்று(மார்.18) பாண்டியன் நகரில் உள்ள மதனுடைய இல்லத்தில் காத்தமுத்துவை வரவழைத்து பத்தாயிரம் லஞ்சமாக வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

Similar News

News September 19, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️கரும்பு திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பிடாகம்
▶️பஞ்சாயத்து அலுவலக வளாகம், பரனூர்
▶️VPRC கட்டிட வளாகம், செண்டூர்
▶️VPRC கட்டிட வளாகம், சாலவாடி
▶️ராமானூஜர் திருமண மஹால், பல்லரிபாளையம், சித்தலிங்கமடம்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News September 18, 2025

நலமான பெண்கள் வளமான குடும்பம் மருத்துவ முகாம்

image

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ என்ற சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டு மகளிருக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.

News September 18, 2025

மலை குன்றில் சாராயம் காய்சியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!