News March 28, 2024
விழுப்புரத்தில் நாதக, பாமக வேட்பு மனுக்கள் ஏற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை வேட்பாளருக்கான மனுக்கள் சரிபார்த்தல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமை தாங்கினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
Similar News
News December 18, 2025
விழுப்புரம் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.. 1.) <
News December 18, 2025
விழுப்புரம்: மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி சுகந்தி (வயது 36). இவர் வீட்டில் தனியாக இருந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (38) என்பவர் மது போதையில் அத்துமீறி வீட்டிற்குள் சென்று, அவரை திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சுகந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமலிங்கத்தை காணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 18, 2025
பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயபடுத்திய சம்பவம்: 7 ஆண்டு சிறை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காலனி கடையில் வேலை பார்த்து வந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுமாறு வற்புறுத்திய குற்றத்துக்காக, சிட்டாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் கொளப்பாறையை சேர்ந்த நாகம்மாள் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா இன்று தீர்ப்பு வழங்கினார்.


