News March 28, 2024

விழுப்புரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

image

விழுப்புரம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (மார்ச் 27) காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம், ராஜ் சாரிடபிள் எஜுகேஷன் காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்றம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

Similar News

News December 4, 2025

மாரத்தான்: பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.

News December 4, 2025

விழுப்புரம் எய்ட்ஸ் விழிப்புணர்வில் கலந்து கொண்ட ஆட்சியர்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டார்.பின்னர், இன்று (டிச.04) எய்ட்ஸ் விழிப்புணர்வு போஸ்டர்களை ஆட்டோவில் ஒட்டினார்.

News December 4, 2025

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!