News March 28, 2024

விழுப்புரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

image

விழுப்புரம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (மார்ச் 27) காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம், ராஜ் சாரிடபிள் எஜுகேஷன் காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்றம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

Similar News

News December 10, 2025

விழுப்புரம்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 10, 2025

விழுப்புரம்: மயங்கி விழுந்து விவசாயி பலி

image

கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கன்னியம்மாள் (45), செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்தார். அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 10, 2025

விழுப்புரம்: பஸ்சில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

image

குன்னியூரைச் சேர்ந்த ஸ்ரீபிரியா (26), சென்னை திருமண நிகழ்வுக்காக அரசுப் பேருந்தில் விழுப்புரம் நோக்கி பயணித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அவர் இறங்கி பார்த்தபோது, தன் பையில் வைத்திருந்த 3.5பவுன் நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பேருந்துக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் நகையை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபிரியா புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!