News January 2, 2025
விழுப்புரத்தில் ஒரே நாளில் 102 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.1) புத்தாண்டையொட்டி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 102 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
விழுப்புரம்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 9, 2025
விழுப்புரம்: கணவரின் அலட்சிய செயலால் மனைவி மரணம்!

விழுப்புரம் அடுத்த உலகலாம்பூண்டியை சேர்ந்தவர் பரந்தாமன் இவர் தனது மனைவி மாலாவுடன் கடந்த 3-ஆம் தேதி பைக்கில் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்னமாதேவி பகுதியில் வேகத்தடையில் பரந்தாமன் பைக்கை வேகமாக ஓடியுள்ளார், இதனால் மனைவி மாலா தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மாலா உயிரிழந்தார். போக்குவரத்து விதியை மீறி சென்றது, உயிரிழப்பு என்று பரந்தாமன் மீது வழக்கு பதிவு.
News December 9, 2025
விழுப்புரம்: 11-ம் வகுப்பு மாணவி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை

வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது 16 வயது மகள் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆறு மாதமாக வயிற்று வலி இருந்து வந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த ஜன்னல் கம்பியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


