News January 2, 2025
விழுப்புரத்தில் ஒரே நாளில் 102 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.1) புத்தாண்டையொட்டி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 102 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
விழுப்புரம்: கிணற்றில் குளித்த வாலிபர் வலிப்பு வந்து இறப்பு!

விழுப்புரம்: செல்லங்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (32), நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாத நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், அவரை பிணமாக மீட்டனர். குளித்துக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
News November 24, 2025
மேல்மலையனூர் தவற விட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவத்தின் போது தவறவிட்ட எட்டு சவரன் நகை_ பாதுகாப்பு பணியில் இருந்த இரு காவலர்களின் கையில் கிடைத்த நகை உரியவரிடம் இரு காவலர்கள் மூலமாகவே இன்று ஒப்படைக்கப்பட்டதுநகையின் உரிமையாளர் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
News November 24, 2025
சென்னை-விழுப்புரம் ரயில் பகுதி ரத்து

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் எழும்பூர்- விழுப்புரம் பிரிவில் விக்கிரவாண்டி யார்டில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9:45 க்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் புறப்படும் மின்சார ரயில் (66045) திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திண்டிவனம்-விழுப்புரம் வரை பகுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


