News September 14, 2024

விழுப்புரத்தில் இறுதி கல்லூரி கலந்தாய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் செப்.19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடக்க உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், இக்கலந்தாய்வில் டி.சி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (13.11.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News November 13, 2025

டாஸ்மாக் ஊழியரிடம் வழிபறி: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

image

விழுப்புரம்,பனையபுரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 4,37,592 பணத்தை வழிபறி செய்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (நவ.13) நடைபெற்றது. பண்ருட்டி அருகேயுள்ள மாம்பட்டு பகுதியை சேர்ந்த சசிகுமார், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் 3 வருடம் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

News November 13, 2025

விழுப்புரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

image

விழுப்புரம் நகரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்பைஸ் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாளை(நவ.14) காலை7 மணி முதல் 11 மணி வரை இலவச சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. விழுப்புரம் லைன்ஸ் சங்கம் மற்றும் சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!