News September 14, 2024
விழுப்புரத்தில் இறுதி கல்லூரி கலந்தாய்வு

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் செப்.19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடக்க உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், இக்கலந்தாய்வில் டி.சி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
News November 22, 2025
விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
News November 22, 2025
விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது பாலியல் புகார்!

விழுப்புரம்: திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, தன்னை மிரட்டி, தனிமையில் இருந்து, அதை வீடியோ எடுத்ததாக கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பாஸ்கரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


