News December 4, 2024
விற்பனையாளர் கட்டுணர் தேர்வு: 2,398 பேர் ஆப்சன்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,201 விண்ணப்பித்த நிலையில் 3,232 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். கட்டுணர் பணிக்கு 787 பேர் விண்ணப்பித்த நிலையில், 360 பேர் பங்கு பெற்றனர். இந்த தேர்வில் மொத்தம் 2,398 பேர் பங்கேற்கவில்லை.
Similar News
News December 6, 2025
குமரி: தண்டவாளத்தில் தலை வைத்து மாணவர் தற்கொலை

தக்கலை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி ரயில் டிரைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வேளாங்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன்(18) என்பதும், அவர் நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை.
News December 6, 2025
குமரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

குமரி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மதுசூதனபுரம், புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன்விளை, பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, பருத்திவிளை, காக்காதோப்பு, ஆலுவிளை, மருதங்கோடு, புலியூர்சாலை, அருமனை, பளுகல், களியக்காவிளை, விளவங்கோடு, கழுவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். SHARE
News December 5, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


