News October 24, 2024

விரைவில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம் 

image

பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

Similar News

News December 19, 2025

சென்னை: கலர் கோழிக்குஞ்சுக்காக கொலை!

image

ஆவடி அருகே, வீட்டில் வளர்த்த கலர் கோழிக்குஞ்சை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்த குற்றவாளி அன்பழகனுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று (டிச.18) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2025

சென்னையில் இன்று கரண்ட் கட்!

image

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பல இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்குன்றம், சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!