News October 24, 2024

விரைவில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம் 

image

பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

Similar News

News February 22, 2026

உங்கள் பகுதியில் மின் திருட்டா? உடனே புகார் அளியுங்கள்!

image

சென்னை மின் பகிர்மான வட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கண்டறியப்பட்ட 11 மின் திருட்டு வழக்குகளுக்காக ரூ.9,13,593 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின் திருட்டு குறித்துப் பொதுமக்கள் 9445857591 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின் திருட்டு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என எச்சரித்துள்ளது.

News February 22, 2026

மின்சார ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக பாதிப்பு

image

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை–தாம்பரம் மின்சார ரயில் சேவை மூன்றாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 204 முறை இயக்கப்படும் ரயில்கள் தற்போது 164 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதுடன் சில இடங்களில் சிக்னல் கோளாறும் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடியும் வரை தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 22, 2026

சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!