News April 1, 2025

விரைவில் திருமணம் ஆக செல்ல வேண்டிய கோயில்

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோயில் ஒரு அக்னி தலமாகும். இக்கோயிலில் உள்ள காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்குமாம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோட்டை எனும் பகுதியில் இக்கோயில் உள்ளது.

Similar News

News November 19, 2025

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் வழியாக திருவனந்தபுரம் நார்த் – சத்ய சாய் பி நிலையம் – திருவனந்தபுரம் நார் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் நவ.23- ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த்தில் இருந்தும், நவ.25- ஆம் தேதி சத்ய சாய் பி நிலையத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.

News November 19, 2025

சேலத்தில் ரூ. 2 லட்சம் கடனுக்காக 3 உயிர்கள் பலி!

image

சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.போலீசார் விசாரணையில் பால்ராஜ் எழுதிய கடிதம் சிக்கியது.அதில், அவர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்த சண்முகம் என்பவர் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதனால் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.பள்ளப்பட்டி போலீசார்,சண்முகத்தைக் நேற்று கைது செய்தனர்.

News November 19, 2025

கெங்கவல்லி கொலை வழக்கில் தீர்ப்பு!

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம், வீரகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டசெல்வராஜ் (57), ராயர்பாளையம், வாணியர் தெருவை சேர்ந்த செல்வம் (55) என்பவரை கடந்த 20.09.2023 ஆம் தேதி அருவாளால் கடுமையாக தாக்கியதில் செல்வம் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!