News April 13, 2025

விருத்தாசலம் அருகே 390 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 390 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 21, 2025

கடலூர்: டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

image

வெண்கரும்பூரை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவர் பைக்கில் தனது மகன் விஷ்வாவுடன் கருவேப்பிலங்குறிச்சி சென்றபோது, எதிரே வந்த பெண்ணாடத்தை சேர்ந்த ஜெகன் (25) என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணிகண்டன், விஷ்வா ஆகியோர் படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.‌ இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 21, 2025

கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 21, 2025

கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!