News April 25, 2025
விருதுநகர்: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News October 15, 2025
விருதுநகர்: முதியவர் மீது போக்சோ வழக்கு

வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (70) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி மையத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து, நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி நேரில் விசாரித்து, பிறகு முதியவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சாத்துார் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 15, 2025
விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 2024ல் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போட்டோகிராபர் முருகேசன் (55) கைது செய்யப்பட்டார். இந்த போக்சோ வழக்கு ஸ்ரீவி. போக்சோ நீதிமன்றத்தில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கோரிக்கைகளாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.