News April 28, 2025

விருதுநகர்: மே1 ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராமஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராமஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2024 முதல் 31.03.2025 வரை), இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

Similar News

News November 25, 2025

விருதுநகரில் போக்குவரத்து பாதிப்பிற்கு தீர்வு எப்போது?

image

விருதுநகரில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் மூலம் பொருட்கள் பிற மாவட்ட, மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளும் இதை வாக்குறுதியாக வைத்து பிரசாரம் செய்த நிலையில் தற்போது வரை இவை நிறைவேற்றப்பட்டாததால் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

News November 25, 2025

விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

விருதுநகர்: வழிபறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது

image

சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமர் 42. பழக்கடை நடத்தி வரும் இவர் கடையில் இருந்த போது அங்கு போதையில் வந்த திருத்தங்கல் தெற்கு தெரு சாமுவேல், முருகன் காலனி சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ராமரை அடித்து ரூ. 2 ஆயிரம் பறித்தனர்.மேலும் அரிவாள், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரித்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.

error: Content is protected !!