News September 12, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதமும் 15 நாட்கள் கடை மூடி சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ.50,000 மற்றும் ஒரு மாதம் கடை மூடி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்று மாத கடை மூடி சீல் வைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 19, 2025
விருதுநகர்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

விருதுநகர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க.
News December 19, 2025
விருதுநகரில் பள்ளி மாணவர் தற்கொலை

விருதுநகர் RS நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரின் மகன் விஸ்வ பாண்டி 15. இவர் 10th படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதில் மன வருத்தமடைந்து நேற்று வீட்டின் கபோர்டு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் சத்தம் வராமல் இருக்க வாயில் செல்லோ டேப் ஒட்டியும், இரு கால்களையும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
கிளைகளை வெட்டி சேதப்படுத்தியவர் மீது வழக்கு

மம்சாபுரம் பகுதி சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாழைகுளம் பகுதியில், மாந்தோப்பு வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அருகில் தோப்பு வைத்திருக்கும் கருப்பையா என்பவர் மாமரங்களின் கிளைகளை சேதப்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மம்சாபுரம் போலீசார் மம்சாபுரம் கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


