News August 2, 2024
விருதுநகர் மாவட்டத்தை கண்காணிக்க ஆணை

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும்,மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
சாத்துார் அருகே விபத்தில் பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மேசியார் தாஸ், இவர் மனைவி வனிதா, குழந்தை சஞ்சனா இவர்கள் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது சாத்துார் – கோவில்பட்டி சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் வனிதா சம்பவ இடத்தில் பலியானார். கணவரும், குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
News September 16, 2025
விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி வனப்பகுதி தேவியாறு அருகே 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றும் கடும் வெயில், காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 16, 2025
விருதுநகர்: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <