News August 8, 2024
விருதுநகர் எஸ்.பி. கரூர் எஸ்.பி.யாக நியமனம்

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்.பி. கா.பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
கரூர்: கடன் வேண்டுமா? APPLY NOW

கரூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்படும். இதில் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில், 25 சதவீதம் என அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலத்தை அனுகவும். 04234-245177, 8925533960 என்ற எண்ணை அழைக்கவும்.
News November 23, 2025
பஞ்சபட்டியில் வீட்டின் பின்புறம் மது விற்ற பெண் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேல பஞ்சபட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி மலர் (45). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற மலர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 23, 2025
கரூர்: What’s App-ல் வரும் ஆபத்து! உஷார்

கரூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன் படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும்.அந்த லிங்கை கிளிக் செய்தல் உங்கள் பணம் பறிபோகலாம். எனவே, மக்களே உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!


