News March 28, 2024
விருதுநகர்: ஆயுதத்தை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் நேற்று மாலை என் புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு அரிவாளை காட்டி சாலையில் செல்வோரை மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 27, 2025
சிவகாசி அருகே வீட்டில் பீரோவை உடைத்து நகை கொள்ளை

சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் அழகர் 50. ஆடு, கோழிகள் வளர்த்து கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த முத்துலட்சுமி 45, வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அழகர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது முத்துலட்சுமி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 3 பவுன் தங்கச் செயின், நான்கரை பவுன் கம்மலை திருடினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
விருதுநகர்: வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

நத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). இவரது மனைவி வைதேகி. இவர்களது 2-வது குழந்தை கிருத்வீகா முத்ரா(2)வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்க சென்றிருந்தார். அப்போது குழந்தை கிருத்வீகா முத்ரா பாத்ரூமில் உள்ள தண்ணீர் வாளியில் விளையாடிய போது, தண்ணீரில் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்


