News November 22, 2024

விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

image

வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணிபாரதி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள், தமிழக பொதும்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல், விருதுநகர் , ராமநாதபுரம் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News November 22, 2025

ஸ்ரீவி.யில் வீட்டின் முன்பு நிறுத்திய பைக் அபேஸ்

image

ஸ்ரீவில்லிபுத்துார் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அருண்குமார் 23. இவர் நவ.18 இரவு தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் டூ வீலரை காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தனிப்படை போலீசார் தேடுதலில் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் 18 ,, 17 வயது சிறுவனும் டூவீலரை திருடி சென்றது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News November 22, 2025

விருதுநகர்: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News November 22, 2025

கே.டி.ராஜேந்திரபாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் டிச.19.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!