News April 17, 2025
விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
விருதுநகர்: கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா. இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த 2023ம் ஆண்டு மனைவி வீட்டில் கற்பகராஜா உயிரிலிருந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் ராஜலட்சுமி உள்பட 4 பேர் கற்பகராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் நேற்று ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபது தீர்ப்பளித்தார். மேலும் மூன்று பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
News September 18, 2025
விருதுநகர் மக்களே., இதை மிஸ் பண்ணிடாதீங்க!

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சூலக்கரை மேடு, அரசு ITI அருகில்) நாளை (19.9.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே இதனை SHARE பண்ணுங்க.
News September 18, 2025
காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

பாண்டிச்சேரியில் இருந்து காரில் விருதுநகர் நோக்கி மது பாட்டில்கள் கடத்தி வருவதாக விருதுநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த நபர் அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வாகன காப்பகத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.