News April 17, 2025
விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
JUST IN விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார் என விருதுநகர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
விருதுநகர்:கம்மியான பள்ளியில் பைக்,கார் வேண்டுமா..

விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரேசன் அரிசி கடத்தலில் சிக்கியவர்கள் மீது வழக்கு பதிந்தனர். இதில் 7 இருசக்கர வாகனங்கள், 13 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு அலுவலகத்தில் நவ.25 அன்று ஏலம் விடப்பட உள்ளது.SHARE பண்ணுங்க.
News November 24, 2025
பூர்த்தி செய்து 495 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் 429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான படிவங்கள், திருநங்கை வாக்காளர்களிடமிருந்து 30, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்து 36 படிவங்கள் என மொத்தம் 495 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


