News March 27, 2025
விருதுநகர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

விருதுநகர் மேட்டமலை குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மண்டல வருவாய் அலுவலர் ஆகியோர் பரிசீலித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2025
விருதுநகரில் டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடல்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மகாவீரர் ஜெயந்தி தினமான நாளை(ஏப்.10) ஒரு நாள் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிமதாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 9, 2025
ஆண்டாள்,ரங்கமன்னார் ஏழாம் நாள் காலை புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 7-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் சாலியர் மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
News April 9, 2025
விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் சூலக்கரையில் நாளை மறுநாள்(ஏப்.11) காலை 10 – 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் இங்கே <