News March 21, 2024

விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Similar News

News December 18, 2025

விருதுநகர் அருகே கண்மாயில் கிடந்த ஆண் சடலம்

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மாங்குளம் கண்மாயில் இன்று டிசம்பர் 18 அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் அவர் பாளையம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(54) என தெரிய வந்தது.‌ அவர் தவறி விழுந்து இறந்தாரா வேறு ஏதேனும் காரணமா என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 18, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம்

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சி மொழி சட்டம் வரலாறு பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைமுறைகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களுக்கு பட்டிமன்றம் ஒன்றியம் வட்ட அளவில் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி மொழி சட்டம் குறித்து விளக்கக் கூடம் நடைபெறும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்

News December 18, 2025

விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!