News March 21, 2024
விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Similar News
News November 24, 2025
விருதுநகர்:புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் 110 ஸ்டால்களில் ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இலக்கியவாதிகள், புத்தகப் பிரியர்கள் என பலரும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர்.மேலும் போட்டித்தேர்வு புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
News November 24, 2025
விருதுநகர்: அரசுப்பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து சேதம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
News November 24, 2025
விருதுநகர் அருகே மின்வேலி அமைத்த நபர் கைது!

தொப்பலாக்கரையில் நேற்று விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற விவசாயி உயிரிழந்தார். தோட்டத்திற்கு உரம் போடச் சென்றபோது அருகிலுள்ள தங்கப்பாண்டியன் தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி மாரிச்சாமி பலியான நிலையில் பரளச்சி போலீசார் தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்தனர்.


