News March 21, 2024

விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Similar News

News November 19, 2025

அருப்புக்கோட்டையில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

image

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இன்று (நவ.19) நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

image

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை. எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 19, 2025

விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

image

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!