News August 19, 2024
விருதுநகர் அருகே விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலி

தேனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவரும் சிவகாசி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று(ஆக.,19) பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், நத்தம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அர்ச்சுனா நதியின் ஆற்றுப் பாலத்திற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை கவனிக்காமல், கரையில் மோதி விழுந்ததில் இருவரும் பலியாகினர். இன்று காலை உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
விருதுநகரில் ஆக.14ல் வேலை வாய்ப்பு முகாம்!

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <
News August 11, 2025
விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம்.
News August 10, 2025
விருதுநகரில் இனி குண்டாஸ் பாயும் என எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.