News March 20, 2024
விருதுநகர் அருகே போக்குவரத்து நெரிசல்

சிவகாசி மாநகராட்சிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பாய்ஸ் ஸ்கூல் அருகே காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் முறையாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததே இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Similar News
News January 8, 2026
விருதுநகர் ஒரே நாளில் 415 பேர் கைது

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்றுதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் பவுன்தாய் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
மறியலில் ஈடுபட்ட 415 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.
News January 7, 2026
BREAKING விருதுநகர்: கொலையில் மேலும் ஒருவர் கைது

காரியாபட்டி அருகே ஆவியூரில் கஞ்சா போதையில் வீட்டு பிரச்சினை காரணமாக ராமசாமி(33) என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரவீன்(20), அவரது நண்பர்களான செல்லப்பாண்டி(19), கருப்பசாமி (18), சஞ்சீவ்(18) ஆகிய 4 பேர் சரணடைந்த நிலையில் அவர்கள் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய அன்பரசனை(24) போலீசார் தற்போது கைது செய்தனர்.
News January 7, 2026
விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


