News March 20, 2024
விருதுநகர் அருகே போக்குவரத்து நெரிசல்

சிவகாசி மாநகராட்சிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பாய்ஸ் ஸ்கூல் அருகே காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் முறையாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததே இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Similar News
News November 20, 2025
விருதுநகர் அருகே கோவில் உண்டியல் திருடிய நபர் கைது

திருச்சுழி அருகே கொக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் திருடு போனதாக கொக்குளத்தை சேர்ந்த கருப்பையா திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் விசாரணையில் சூச்சனேரிப்பட்டியைச் சேர்ந்த செல்வம் உண்டியலை திருடியது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.7,200 பணத்தை மீட்டனர்.
News November 20, 2025
விருதுநகர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

விருதுநகர் மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 20, 2025
விருதுநகர் அருகே போக்குவரத்து மாற்றம்

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி – விருதுநகர் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை சார்பாக இத்தகவல் தொடர்பான பேனர் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர், பாலவநத்தம் செல்லும் அனைத்து வாகனங்களும் அரசு மருத்துவமனை அருகே உள்ள சுக்கிலநத்தம் சாலை வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


