News March 24, 2024

விருதுநகர் அருகே கார் விபத்து

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் பாண்டி. இவர் நேற்று பைக்கில் ஸ்ரீவி – ராஜபாளையம் சாலை, மடவார்வளாகம் பகுதியில் சென்றபோது, ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கார் தங்கவேல்பாண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கார் ஓட்டி வந்த மாங்குடி பாண்டியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 10, 2025

விருதுநகர்: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

image

விருதுநகர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இதற்கு தேர்வும், விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 10, 2025

விருதுநகர்: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

News December 10, 2025

விருதுநகர்: கப்பலில் வேலை.. 4.5 லட்ச ரூபாய் மோசடி

image

சாத்துாரை சேர்ந்தவர் ஜெயவீரன் மகன் கவி விஷ்ணு. இவர் நெல்லை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற போது, அவரது ஆசிரியர் டென்சிங் டேனியல் (45), மனைவி ஷர்மிளா (32) ஆகியோர் கவி விஷ்ணுக்கு சிங்கப்பூர் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதனை அடுத்து, ஆசிரியர் உட்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!