News March 24, 2024
விருதுநகர்:ஆடு வெங்காயத்தை தின்றதால் ஏற்பட்ட பிரச்சனை

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசி (33).பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இருந்த வெங்காயத்தை வீரம்மாள் என்பவர் வளர்த்து வரும் ஆடுகள் தின்றுவிட்டதாகவும்,இதனால் ஆடுகளை விரட்டியதால் ஆத்திரமடைந்த வீரம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மலையரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 19, 2025
விருதுநகர்: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.