News April 18, 2025

விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

image

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.

Similar News

News December 14, 2025

விருதுநகர்: ரயில் மோதி வாலிபர் பலி

image

விருதுநகர்-துலுக்கப்பட்டி ரயில்நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த கணேசமூர்த்தி (36) என் தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார் என விசாரணையில் கூறப்படுகிறது.

News December 14, 2025

விருதுநகர்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

விருதுநகர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News December 14, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளியான மதியழகன் (55). இவர் தீராத வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அல்போன்ஸ் மேரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!